சி.பா.ஆதித்தனார் உருவாக்கிய தமிழின உணர்வையும் – ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் உணர்வையும் வரவேற்று அவருடைய பாதையில் பயணிப்போம்!

1 Min Read

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!

சென்னை, செப்.28 சி.பா.ஆதித்தனார் உருவாக்கிய தமிழின உணர்வையும் – ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் உணர்வையும் வரவேற்று அவருடைய பாதையில் பயணிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘தினத்தந்தி‘ நாளிதழின் நிறுவனரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேனாள் தலைவருமான சி.பா.ஆதித்தனாரின் 121 ஆம் பிறந்த நாளான நேற்று (27.9.2025) சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவருடைய படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

பெரியாரின் பாராட்டுப் பெற்ற, மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றவர் ‘தினத்தந்தி’யின் நிறுவனர் அய்யா சி.பா. ஆதித்தனார் அவர்கள்.

ஆதித்தனார் அவர்கள் குடும்பத்திற்கும், தந்தை பெரியாருடைய கொள்கைக்கும் மிகப்பெரிய அளவிற்குத் தொடர்பு உண்டு. இந்த நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூர் நாட்டில்கூட தொடர்புகள் உள்ளன.

அவருடைய நினைவைப் போற்றி, அவருடைய பிறந்த நாள் மூலமாக, அவர் உருவாக்கிய தமிழின உணர்வையும், மொழி உணர்வுப் பாதுகாப்பையும், எந்நிலையிலும், ஹிந்தித் திணிப்பை  எதிர்க்கக்கூடிய அவருடைய உணர்வுகளையும் என்றைக்கும் வரவேற்று, நன்றி பாராட்டி, அவருடைய பாதையில் தொடர்ந்து நடப்போமாக!

– இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *