அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் – ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, செப். 28– அமெரிக்காவிலிருந்து ஜன.20 முதல் செப்.25 வரை 2417 இந்தியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- புதிய வரிகள் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு அறிவிப்பைப் பார்த்தோம். மருந்து மற்றும் பிற தயாரிப்புகள் குறித்த அறிக்கையை நாங்கள் பார்த்தோம், மேலும் தொடர்புடைய அமைச்சகமும் துறையும் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து அதன் தாக்கத்தை ஆராய்ந்து வருகின்றன.பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்து நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் பேசி இருப்பதை நாங்கள் பார்த்தோம். 2417 இந்தியர்கள் வெளியேற்றம்

அவரது கருத்துகள் அனைத்தும் உண்மைக்கு மாறானது, முற்றிலும் ஆதாரமற்றது. எந்த நேரத்திலும் பிரதமர் மோடி, அதிபர் புதின் இடையே உக்ரைன் போர் குறித்து உரையாடல் எதுவும் நடக்கவில்லை.முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் பொதுக் கருத்துக்களில் அதிக பொறுப்பையும், துல்லியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒருபோதும் நடக்காத உரையாடலை நடந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா தனது தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப் பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்.ஜன.20 முதல் செப்.25 வரை 2,417 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு ள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் பணி என்ற அறிவிப்புகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. ரஷ்ய ராணுவத்தில் பணியாற்ற வழங்கப்படும் சலுகைகளைத் தவிர்க்க அனைத்து இந்தியர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். ரஷ்ய ராணுவத்தில் 27 இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். காஷ்மீர் குறித்த எங்கள் அறிக்கை தெளிவாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *