நடக்கக் கூடாத பெரும் துயரம்! எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் தவிக்கிறோம்!

கரூரில் இருந்து வரும் நெஞ்சைப் பிழியும் செய்திகள் ஆற்றொணாத் துயரத்தை ஏற்படுத்து கின்றன. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத கோரம் இது.

உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில், காவல்துறை விதித்தக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றியிருந்தால் இத்தகைய பேரிழப்புகள் ஏற்பட்டே இருக்காது. பல முறை எச்சரித்தும், நீதிமன்றமே கண்டித்தும் கூட கட்டுப்பாடு காக்கத் தவறியதன் விளைவை, இத்தனை உயிர்களை விலையாகக் கொடுத்தா காண்பது?

உடனடி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. உயிர்களைக் காப்பதே இப்போது நம் முதல் கடமை!

கூட்டம் காட்டுவது மட்டுமே அரசியல் அல்ல என்பதை இவ்விழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இனியேனும் உணரட்டும்!

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கவியலாத இழப்பில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலை எப்படித் தருவது என்று தெரியாமல் தவிக்கிறோம்.

 

ஆசிரியர் அறிக்கை

 

நாள்: 27.9.2025     தலைவர்,

நேரம்: இரவு 9 மணி திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *