உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் பதவியேற்பு

1 Min Read

இந்தியா

புதுடில்லி, நவ.10 உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதை தொடர்ந்து, நீதிபதிகள் பலம் 34 ஆக அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் பணியாற்ற அனுமதி உள்ளது. இதில் மூன்று இடங்கள் காலியாக இருந்தன. 

இந்த இடங்களுக்கு மூன்று உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் பெயர்களை கொலீ ஜியம் பரிந்துரைத்தது.இந்த பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண் டுள்ளது. 

இதையடுத்து, புதுடில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மேஷியா, கவுஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர், உச்சநீதிமன்ற நீதிபதி களாக நியமிக்கப்பட்டு உள்ள தாக ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் று அறிவித்தார். புதிய நீதிபதிகள் மூவ ருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடம் முழுமை யாக நிரப்பப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *