கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி ஊக்கத்தொகை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை, செப்.27-   தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளை யாட்டு வீரர்களுக்கு ரூ.1.50 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங் கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரி வித்தார்.

தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பன்னாட்டு, ஆசிய, தேசிய அளவிலான விளை யாட் இப்போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (26.9.2025) நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, 819 விளையாட்டு வீரர், வீராங் கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். பணியின்போது காலமான தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணைய பணியாளர் களின் வாரிசுகளான எஸ்.தீபா, ஆர்.தினேஷ், எம்.தினேஷ்குமார், பி.ஹரிஷ் ஆகிய 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கி னார். பின்னர், அவர் பேசியதாவது

கல்வி என்றால் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மட்டுமின்றி, உடற்கல் வியும் முக்கியம்.  விளையாட்டு வீரர்களை கொண்டாடுவதில் நாட்டிலேயே முதன்மை மாநில மாக தமிழ்நாடு உள்ளது. அந்த அளவுக்கு அவர்களுக்கு தேவை யான வசதிகளை அரசு செய்து வருகிறது.

கடந்த நான்​கரை ஆண்​டு​களில் நாட்​டில் வேறு எங்​கும் இல்​லாத அளவில் 4,510 விளை​யாட்டு வீரர்​களுக்கு ரூ.150 கோடி உயரிய ஊக்​கத்​தொகையை தமிழ்நாடு அரசு வழங்​கி​யுள்​ளது. பொது​வாக, போட்​டிகளில் பங்​கேற்று வெற்றி பெற்ற பிறகு​தான் வீரர்​களுக்கு அரசு அங்​கீ​காரம், பரிசுத் தொகை கிடைக்​கும். ஆனால், போட்​டி​யில் கலந்து கொள்​வதற்கு முன்பே வீரர்​களுக்கு ஊக்​கத்​தொகை, நிதி​யுத​வியை தமிழ்நாடு அரசு மட்​டும்​தான் வழங்​கு​கிறது.

விளை​யாட்​டில் வெற்றி பெற்​றால் அரசு வேலை​யும் வழங்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், தமிழ்நாட்டு வரலாற்​றில் முதல்​முதலாக கடந்த ஆண்டு 100-க்​கும் அதி​க​மான வீரர்​களுக்கு அரசு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்த நிகழ்ச்​சி​யில் விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய துணைத் தலை​வர் அசோக் சிகாமணி, உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, ஸ்பீட் ஸ்கேட்​டிங் உலக சாம்​பியன் ஆனந்த்​கு​மார் வேல்​கு​மார், செஸ் கிராண்ட் மாஸ்​டர் ர.வைஷாலி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *