சென்னை, செப்.27- தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளை யாட்டு வீரர்களுக்கு ரூ.1.50 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங் கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரி வித்தார்.
தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பன்னாட்டு, ஆசிய, தேசிய அளவிலான விளை யாட் இப்போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (26.9.2025) நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, 819 விளையாட்டு வீரர், வீராங் கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். பணியின்போது காலமான தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணைய பணியாளர் களின் வாரிசுகளான எஸ்.தீபா, ஆர்.தினேஷ், எம்.தினேஷ்குமார், பி.ஹரிஷ் ஆகிய 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கி னார். பின்னர், அவர் பேசியதாவது
கல்வி என்றால் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மட்டுமின்றி, உடற்கல் வியும் முக்கியம். விளையாட்டு வீரர்களை கொண்டாடுவதில் நாட்டிலேயே முதன்மை மாநில மாக தமிழ்நாடு உள்ளது. அந்த அளவுக்கு அவர்களுக்கு தேவை யான வசதிகளை அரசு செய்து வருகிறது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவில் 4,510 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி உயரிய ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. பொதுவாக, போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பிறகுதான் வீரர்களுக்கு அரசு அங்கீகாரம், பரிசுத் தொகை கிடைக்கும். ஆனால், போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பே வீரர்களுக்கு ஊக்கத்தொகை, நிதியுதவியை தமிழ்நாடு அரசு மட்டும்தான் வழங்குகிறது.
விளையாட்டில் வெற்றி பெற்றால் அரசு வேலையும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டு வரலாற்றில் முதல்முதலாக கடந்த ஆண்டு 100-க்கும் அதிகமான வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் அசோக் சிகாமணி, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன் ஆனந்த்குமார் வேல்குமார், செஸ் கிராண்ட் மாஸ்டர் ர.வைஷாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்