தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் கருநாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

பெங்களூரு, செப்.27-  தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கருநாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லியில் 26.09.2025 அன்று எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தின் 44ஆவது கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு செயலாளர், நீர்வளத்துறை ஜெ.ஜெயகாந்தன், மற்றும் இரா.சுப்பிரமணியம் – தலைவர், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு உறுப்பினர், தற்பொழுது (25.09.2025) மேட்டூர் அணையின் நீர் இருப்பு 92.105 டி.எம்.சி ஆக உள்ளது என்றும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,419 கன அடியாக உள்ளது என்றும் அணையிலிருந்து வினாடிக்கு 9,033 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், கருநாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழ்நாட்டிற்கு 2025, அக்டோபர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 20.22 டி.எம்.சி. நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி கருநா டகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தி னார்.

இந்த கூட்டத்தின் முடிவில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *