லடாக் பகுதிக்கு மாநிலத் தகுதி வழங்கக்கோரி போராட்டம் சமூக ஆர்வலர் சோனம் வாங்சு கைது

1 Min Read

லே, செப்.27 லடாக் பகுதிக்கு மாநில தகுதி வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்டத்தின் 6-ஆவது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சு கடந்த 2 வாரங்களாக பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வந்தார். வேறு சில அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநிலத் தகுதி கோரி தலைநகர் லேயில் அங்குள்ள லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் கடந்த 24.9.2025 அன்று வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை லடாக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சோனம் வாங்சுக்குக்கு சொந்தமான இமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக்(எச்அய்ஏஎல்) என்ற பெயரிலான இன்ஸ்டிடியூட்டுக்கு வெளி நாடுகளில் இருந்து ரூ.1.5 கோடி நிதி முறைகேடான வழியில் வந்துள்ளதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது. மேலும், சோனம் பாகிஸ்தான் சென்று வந்தது குறித்து சிபிஅய் விசாரணை நடத்தி வருகிறது.

இன்டர்நெட் சேவை ரத்து: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் கைதைத் தொடர்ந்து லடாக் பகுதியில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *