லே, செப்.27 லடாக் பகுதிக்கு மாநில தகுதி வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்டத்தின் 6-ஆவது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சு கடந்த 2 வாரங்களாக பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வந்தார். வேறு சில அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநிலத் தகுதி கோரி தலைநகர் லேயில் அங்குள்ள லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் கடந்த 24.9.2025 அன்று வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை லடாக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சோனம் வாங்சுக்குக்கு சொந்தமான இமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக்(எச்அய்ஏஎல்) என்ற பெயரிலான இன்ஸ்டிடியூட்டுக்கு வெளி நாடுகளில் இருந்து ரூ.1.5 கோடி நிதி முறைகேடான வழியில் வந்துள்ளதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது. மேலும், சோனம் பாகிஸ்தான் சென்று வந்தது குறித்து சிபிஅய் விசாரணை நடத்தி வருகிறது.
இன்டர்நெட் சேவை ரத்து: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் கைதைத் தொடர்ந்து லடாக் பகுதியில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது