என்னை காலில் பிறந்தவன் என்று சொன்னது தான் ஸநாதனம் இயக்குநர் கரு.பழனியப்பன் உரை வீச்சு

Viduthalai
4 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ. 26 – பிரபல இயக்குநர் கரு பழனியப் பன் பேசிய பேச்சு, இணையத்தில் வைர லாகி கொண்டிருக்கிறது. இதை பாஜகவும் உற்றுக் கவனித்து வருகிறது. 

சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க. நகர் வடக்கு பகுதி தி.மு.க. சார்பில், ஓட்டேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நடை பெற்றது.. “கதை, திரைக் கதை, வசனம் கலைஞரே என்றைக்கும் சிகரம்” என்ற தலைப்பில் கருத் தரங்கமும் நடைபெற்றது. பகுதி செயலாளர் தமிழ் வேந்தன் தலைமையில், நடந்த இந்த கூட்டத் திற்கு, இந்து சமய அற நிலையத்துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

இதில் பிரபல திரைக் கலைஞர் குட்டி பத்மினி, இயக்குநர் கரு.பழனியப் பன், திமுக செய்தி தொடர்பு இணைச் செய லாளர் தமிழன் பிர சன்னா, மக்களவை உறுப் பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மேயர் ஆர்.பிரியா உள் ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த கருத்தரங்கில் கரு.பழனியப்பன் பேசிய தாவது: முத்தமிழறிஞர் கலைஞர், தன்னுடைய எழுத்தால் அரசியலுக்கு வருவதற்கு முன்பே சொந்த வீடு வாங்கிவிட் டார்.. திராவிட இயக்க தலைவர்களில் முதலில் கார் வாங்கியது கலைஞர் தான். நடிகராக சிவாஜி 250 ரூபாய் ஊதியம் வாங்கிய காலத்திலேயே, எழுத்தாளராக வசன கர்த்தாவாக 500 ரூபாய் ஊதியம் வாங்கியவர் கலைஞர் தான்.. அப் போது அவர் 500 ரூபாய் ஊதியம் வாங்கிய காலத் தில், தங்கத்தின் விலை கிராம் வெறும் 10 ரூபாய் தான். அந்தவகையில், கலை ஞரை செல்வந்தனாக மாற்றியது தமிழ் சினிமா. 

குளித்தலை தொகுதி

குளித்தலை தொகுதி யில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றார். கலைஞர் இறப்பிற்கு தமிழ்நாட் டின் கட்சி சார்பின்றி அனைத்து தரப்பட்ட மகளிரும் கண்ணீர் வடித் தார்கள். காரணம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர் என்பதை தமிழ் நாட்டில் உள்ள ஒவ் வொரு பெண்களும் அறிந் திருந்தனர்.

எழுத்து, பேச்சு, வச னம் என்று தான் தொட்ட இடங்கள் அத் தனையிலும் சிறந்து விளங்கியவர் கலைஞர். அதனால்தான், இன்று அவரை பற்றி 100 கூட் டங்களிலும் பேச முடி கிறது. எம்ஜிஆரை விட, முதலமைச்சர் ஸ்டாலி னுக்கு தமிழ்நாட்டில் பெண்கள் ஆதரவு அதி கரித்தே காணப்படுகிறது.. அதற்கு இங்கு நடந்து வரும் கூட்டமே சாட்சி யாக திகழ்ந்து கொண்டி ருக்கிறது.

இன்னும் எத்தனை ஆட்சி வந்தாலும், மகளி ருக்கு இலவச பேருந்து திட்டத்தை ரத்து செய் யவே முடியாது. இந்தி யாவில் எல்லாம் மாநிலங் களுக்கும் முன்னோடி யாக திராவிட மாடல் ஆட்சியே உள்ளது. வரும் மக்களவைத் தேர்த லில் மிகப்பெரிய வெற் றியை தி.மு.க.விற்கு தமிழ் நாட்டின் பெண்கள் பெற்று தருவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதை போல 40 தொகுதியிலும் வெற்றி பெற்றால் தான், நம் முடைய குரல் இன்னமும் வலிமையானதாக இருக் கும். சத்தமா பேசினா தால்தான் அவங்களுக்கு கேட்கும். அதுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.

ஸநாதன ஒழிப்பை பேசிவிட்டு, மறுநாளே குடுமுழுக்குக்கு போனார் அமைச்சர் பி.கே.சேகர் பாபு.. இதை பார்த்துதான் பிஜேபி இப்போ குழம்பி போயுள்ளது.. ஆன்மீகம் என்பது வேறு, ஸநாதீகம் என்பது வேறு.. ஸநா தனம் என்பது சாமி கும் பிடுவதா? ஸநாதனம் என்பது சாமி கும்பிடு வதை மறுப்பதா? கிடை யவே கிடையாது.. அது நாத்திகம்.. அது பெரியார் பேசியது.

அப்படியானால் ஸநாதனம் என்பது என்ன? மனிதன் ஒரு வருக்கொருவர் இணை யானவன் கிடையாது. ஒருத்தன் தலையில் பிறந் தவன் ஒருத்தன் காலில் பிறந்தவன், ஒருத்தன் மேலே உட்காரு, ஒருத் தன் கீழே உட்காரு என்று சொல்வதுதான் ஸநாத னம். எல்லாருக்கும் எல் லாமும் என்பது, இந்த ஸநானதத்தில் கிடை யாது.

கிரிக்கெட் போட்டி யில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.. அவர் கள் பெற்ற உலகக் கோப் பையின் மீது, அந்த விளையாட்டு வீரர் கால் வைத்திருந்தார். உடனே நம்ம தேசபக்தர்கள் எல் லாருமே கொந்தளித்து போய்விட்டார்கள். ஜெயிச்சவன் காலை எங்கே வெச்சால் உனக்கென்ன? 

ஒரு கோப்பை மேலே கால் வெச்சதுக்கே இப் படி கதறுகிறாயே, நீ பல காலமாகவே, என்னை காலில் பிறந்தவன் என்று தானே சொல்லிட்டு இருக்கே? மனிதன் காலில் பிறக்கலாமா? ஆக, எதை கொண்டாட வேண்டுமோ அதை கொண்டாடாமல், எதை மதிக்க வேண்டுமோ அதை மதிக்காமல், மனி தனை கீழே தள்ளுவதற் குப் பெயர்தான் ஸநாத னம்” என்றார் கரு.பழனி யப்பன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *