அப்பாடா! கருநாடகாவில் பாஜகவின் உத்தரவுகளை திருத்துவோம்…! திரும்பப் பெறுவோம்…!

Viduthalai
1 Min Read

பிரியங்க் கார்கே உறுதி

பெங்களூரு, மே 26- கருநாடகாவில் முந் தைய பாஜக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை திருத்தவோ, திரும்பப் பெறவோ வாய்ப்புள்ளது என்று அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் மல்லியார்ஜுன் கார்கேவின் மகனும், கருநாடக அமைச்சரு மான பிரியங்க் கார்கே செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ஹிஜாப் தடை தொடர்பாக புதிய உத்தரவு கள் பிறப்பிக்க வாய்ப்புள்ளது என கூறினார். மேலும், மாநிலத்தின் பொருளாதார முன் னேற்றம் மற்றும் செழிப்புக்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து சட்டங்கள் மற்றும் உத்தரவுகளை காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வாய்ப்புள்ளதாகவும்  தெரிவித்தார். 

மாநிலத்தில் பி.எஃப்.அய் மற்றும் பஜ்ரங்தள் மீதான தடை குறித்த காங்கிரசின் நிலைப்பாட்டை அடுத்து ஆர்.எஸ்.எஸ். பற்றி கேட்டதற்கு, கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, “அதிருப்தி மற்றும் நல்லி ணக்கத் திற்கு எதிராக விதைகளை விதைக் கப் போகும் எந்த  அமைப்பையும், அதா வது, மத அமைப்போ,  அரசியல் அமைப்போ அல்லது சமூக அமைப்போ ; எதுவாயினும் அதனை  கருநாடகாவில் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து,  பஜ்ரங்தள், பி.எஃப்.அய் அல்லது வேறு எந்த அமைப்பாக இருந்தாலும், சட்டரீதியாகவும், அரசமைப்பு ரீதியாகவும் அவர்களைச் சமாளிப்போம் என்றும், கருநாடகாவில் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அவற்றைத் தடை செய்ய தயங்க மாட்டோம். ” என்றும்  கூறினார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *