பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்கிட அறந்தாங்கி மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!

2 Min Read

அறந்தாங்கி, செப். 25-  21.9.2025 அன்று மாலை 5 மணிக்கு அறந்தாங்கி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை இடத்தில் மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் க. .மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணைத்தலை வர் ப.மகாராசா கடவுள் மறுப்பு கூறி அனைவரையும் வரவேற்றார். அறிவா சான் தந்தை பெரியார் 147 ஆம் பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்துள்ள சிறப்பினையும், ஓய்வறியா தமது உழைப்பால் தந்தை பெரியாரின் அருந்தொண்டை உலகறியச் செய்திட சிறுகனுரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டிதரவேண்டிய கடமைகளை நினைவுப டுத்தியும், மறைமலைநகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா, கழக மாநில மாநாட்டிற்கு குடும்பத்தோடு பங்கேற்க வேண்டுமென கூறி தொடக்கவுரையாற்றினார். பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில அமைப்பாளர் கரம்பக்குடி முத்து, புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் முனைவர்.மு.அறிவொளி, மாவட்டச்செயலாளர் ஆசிரியர் ப.வீரப் பன், மாவட்ட துணைத்தலைவர் இரா.இளங்கோ, கழக பேச்சாளர் மாங்காடு சுப.மணியரசன், மாவட்டம்.ப.க. செயலாளர் க.வீரையா, நகரத்தலைவர் ஆ.வேல்சாமி, நகர செயலாளர் வழக்குரைஞர் இரா.குமார், கரம்பக்குடி ப.க.பொறுப்பாளர் ந.அம்பிகாபதி, குப்பக்குடி இராசா, தஞ்சை அ.உதயபிரகாசு, ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிறைவாக திராவிடர் கழக தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட கழக துணைத்தலைவர் குப்பக்குடிஇரா.இளங்கோ அவர்கள் பெரியார் உலகத்திற்கு ஒரு இலட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

விடுதலை,உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு புதுக்கோட் டை மாவட்ட செய லாளர் ப.வீரப்பன் சந்தாக்கள் வழங்கினார். ஒவ்வொரு இலட்சம் பெரியார் உலகத்திற்கு வழங்கி வழிகாட்டிய புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் முனைவர் மு.அறிவொளி, மாவட்ட செயலாளர் ப.வீரப்பன் ஆகியோருக்கு அறந்தாங்கி கழகமாவட்டம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்டத்தலைவர்க.மாரிமுத்து செயலாக்கவுரை வழங்கினார்.  இறுதியில் மாணவர் கழகத் தலைவர் மா.வீ.செம்மகிழன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

செகதாப்பட்டினம் இளைஞரணி தோழர் யோவான் தந்தையார் ஆரோக்கியசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.

அக்டோபர் 4ஆம் தேதி செங்கற்பட்டு – மறைமலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – கழக மாநில மாநாட்டிற்கு குடும்பத்தோடு தனி வாகனங்களில் செல்வது என தீர்மானிக்கப்படு
கிறது.

பெரியார்உலகமயம்-உலகம்பெரியார்மயம் என்ற இலட்சிய திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் திருச்சி சிறுகனூரில் 100 கோடி செலவில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு அறந்தாங்கி கழகமாவட்டம் சார்பில் ரூ10 இலட்சம் நிதி திரட்டி அக்டோபர் 20ஆம் தேதி நமது ஒப்பற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *