‘பெண்ணால் முடியும்’ – சாகசத்துக்கு வயது தடை இல்லை 70 வயது மூதாட்டியின் சாதனை

2 Min Read

அபுதாபி, செப்.25  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொன்னத்தடியைச் சேர்ந்தவர் லீலா ஜோஸ். இவருக்கு வயது 70. அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த அவர் 13,000 அடி உயரத்திலிருந்து ‘ஸ்கைடைவிங்’ செய்தார். இந்தியாவிலிருந்து 70 வயது மூதாட்டி ஒருவர் இவ்வளவு உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்ப் நியூசுக்கு லீலா ஜோஸ் அளித்த நேர் காணலில் கூறியதாவது: எனது மகன் அனீஸ் பி ஜோஸைப் பார்க்க கடந்த மாதம் துபாய்க்கு வருகை தந்தேன். அப்போது அவனிடம் ஸ்கைடைவிங் குறித்த ஆசையை வெளிப்படுத்தினேன். எனது நண்பர்களும் இந்த வயதில் இது முடியாத காரியம் என்று எனது கனவுக்கு தடை போட்டனர்.

இருப்பினும், எனது மகன் நான் அந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதை உணர்ந்து அதற்கான ஏற்பாடுகளை செய்தான். துபாயில் உள்ள ஸ்கைடைவிங் குழுவை அணுகி 13,000 அடி உயரத்தில் இருந்து குதிப்பதற்கு ஏற்பாடு செய்தான். அதை மட்டும் என்னால் மறக்க முடியாது.

மேலிருந்து பார்க்கும்போது துபாய் நிலப்பரப்பு முழுவதும் தெரிந்தது. கடலைப் பார்க்கும்போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் கடலில் குதித்து தப்பிவிடலாம் என்று நினைத்தேன். ஏனெனில் எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். அது ஒரு அழகான தருணம். நம்பமுடியாத அனுபவம்.

13,000 அடி உயரத்தில் இருந்து குதித்த சாதனைக்கு எனது கணவர் வழங்கிய ஊக்கம் தான் மிக முக்கிய காரணம். புதிய விஷயங்களை ஆராயும் எனது ஆர்வத்தை அவர் எப்போதும் ஆதரிப்பார். தடை போட மாட்டார். இது எனது முதல் சாகசம் கிடையாது. நான் ஏற்கெனவே வயநாட்டில் ஸிப்லைனிலும், புஜைராவில் பாராகிளைடிங்கிலும் பறந்து சாகசம் செய்துள்ளேன்.

எனக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேரன்கள். எனது வாழ்க்கையை போதும் என்ற அளவுக்கு வாழ்ந்துவிட்டேன். இனி இருக்கும் காலம் எல்லாம் போனஸ்தான். என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய நேரம் இது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. விண்வெளிக்கு செல்லவும் நான் தயாராக உள்ளேன். ஏன் கூடாது?. கனவு காண்பதற்கு வயது தடை இல்லை. இவ்வாறு லீலா ஜோஸ் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *