பி.ஜே.பி. அரசின் புல்டோசர் இடிப்பு! ‘நான் வழங்கியதிலேயே எனக்கு மிகுந்த திருப்தி அளித்த தீர்ப்பு இதுதான்!’ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்கிறார்!

1 Min Read

புதுடில்லி, செப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘புல்டோசர் நடவடிக்கை’’ குறித்துத் தான் அளித்த தீர்ப்பு தனக்கு பெரும் திருப்தியை அளித்ததாகத் தெரி வித்துள்ளார்.

பாஜக ஆளும் வட மாநிலங்க ளில் குற்ற வழக்குகளில் தொடர்பு டையவர்கள், சட்ட விரோத ஆக்கி ரமிப்பு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மாநகராட்சிகளால் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக இஸ்லாமியர்களின் வீடுகள் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கிடையே 2024 நவம்பர் 13 அன்று, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, புல்டோசர் நடவடிக்கை சட்ட பூர்வமானது அல்ல என்று தீர்ப்ப ளித்து அதற்கு நாடு தழுவிய வழிகாட்டுதல்களை வகுத்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர்களின் கல்விக்குழு ஏற்பாடு செய்த பாராட்டு விழா வில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசுகையில், “அந்தத் தீர்ப்பின் மய்யத்தில் மனிதத்தின் பிரச்சினைகள் இருந்தன. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒட்டுமொத்தக் குடும்பமும் துன்பு றுத்தப்படுவதுதான் அந்த வழக்கில் இருந்த முக்கியப் பிரச்சினை.

இந்தத் தீர்ப்பின் பெருமை எனக்கு அளிக்கப்பட்டாலும், அதற்கு இணையான பங்கு நீதிபதி விஸ்வநாதனுக்கும் உண்டு” என்று தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உயர்நீதி மன்றங்களில் நீதிபதிகள் நியம னத்தை விரைவுபடுத்துவதற்கும் தாம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *