ஆன்லைன் சூதாட்டம் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லையா? பாதிக் கிணறு தாண்டிய நீதிமன்ற உத்தரவு

Viduthalai
3 Min Read

சென்னை, நவ.10  தமிழ்நாடு சூதாட்ட தடை சட்டத்தில் ரம்மி, போக்கர் ஆன்லைன் விளையாட்டுகளை ‘அதிர்ஷ் டத்துக் ‘கான விளையாட்டு என்றுகூறி தடை விதித்து தமிழ்நாடு அரசு இயற்றியிருந்த சட்டப் பிரிவுகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த விளையாட்டுகளை விளையாடு வதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதி தாக விதிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தடை விதித்தும், அதை ஒழுங்குபடுத்தும் வகையி லும் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத் துதல் சட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த 2022 அக்.19-ஆம் தேதி நிறை வேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆளுநர் கடந்த மார்ச் 6-ஆம் தேதி அந்த மசோ தாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதை யடுத்து, மார்ச் 23ஆ-ம் தேதி சட்டப் பேரவையில் மீண்டும் மசோதா நிறை வேற்றப்பட்டு, அடுத்த நாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு, சட்டத் துக்கு ஆளுநர்கடந்த ஏப்.10ஆ-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டன.

தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர் வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்து வந்தது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான டில்லி மூத்த வழக்கு ரைஞர்கள் முகுல்ரோஹ்தகி, சி.ஆர்யமா சுந்தரம், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ‘‘இதுபோல ரம்மி, போக்கர் ஆன்லைன் விளையாட்டு களுக்கு தடை விதித்து சட்டம்இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆன்லைனில் ரம்மி விளை யாடுவது திறமை சார்ந்த விளை யாட்டு என உச்ச நீதிமன்றமே கூறிய பிறகு, அதை அதிர்ஷ்டத்துக்கான விளை யாட்டாக கருத முடியாது. எனவே தமிழ்நாடு அரசின் சட்டத்தை முழு மையாக ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டனர்.

தமிழ்நாடு அரசு தரப்பில் டில்லி மூத்த வழக்குரைஞர் கபில்சிபல், அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண் முகசுந்தரம், மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டுகளால் அப்பாவி மக்கள் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதனால், ஆன் லைன் சூதாட்டம் மூலமாக பொது மக்கள் ஏமாறுவதை தடுக்கும் நோக் கிலேயே இச் சட்டம் கொண்டு வரப் பட்டது. இவ்வாறு சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதி காரமும் உள்ளது’’ என வாதிட்டனர். 

இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக் கின் தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதிகள் கடந்த செப்டம்பர் மாதம் உத்தர விட்டனர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று (9.11.2023) தீர்ப்பளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடை சட்டத்தை முழுமை யாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. ஆனால், திறமை சார்ந்த ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை ‘அதிர்ஷ்டத் துக்’கான விளை யாட்டு என்று கூறி தடை விதித்து தமிழ்நாடு அரசு இயற்றியிருந்த சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. 

மேலும் ஆன்லைன் ரம்மி, போக்கர்ஆகியவற்றை விளையாடுவ தற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக் கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *