நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல், செப். 23 நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதி வேந்தன் தெரிவித்தார்.

கல்விக் கடன்

நாமக்கல் அருகே எா்ணாபுரத் தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி யுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

இதில், மாவட்ட ஆட்சியா் துா்க்காமூா்த்தி தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங் கேற்று 161 மாணவ, மாணவி களுக்கு ரூ. 14.23 கோடி மதிப்பில் கடனுதவி களை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு அரசு இம்மாவட்டத் தில் 2 ஆயிரம் மாணவ, மாணவி களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ. 50 கோடி இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து கல்விக்கடன் முகாம்களை கிராம ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும் நடத்தி வருகிறது. இணையம் வழியாக கல்விக்கடன் கோரிய விண்ணப்பங்கள் பதி வேற்றம் செய்யப்பட்டன.

அதன்படி, அனைத்து வங்கிகள் நடத்திய இந்தக் கல்விக்கடன் முகாமில் ரூ. 14.23 கோடி அளவில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் புதிதாக கல்விக்கடன் பெற ஏதுவாக விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *