தமிழர் தலைவருடன் சந்திப்பு

1 Min Read

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்கக் கருத்தரங்கில் பங்கேற்ற கனேஸ்வர், தான் வாசித்த ஆய்வுரையின் நகலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். இவர் அய்தராபாத் பல்கலைக்கழகத்தில், “PERIYAR’S ENGAGEMENT WITH LANGUAGE AND CULTURE” எனும் தலைப்பில் முனைவர் பட்டக் கல்வி பயில்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. உடன் சுப்பிரமணியம் – மாலா. (சென்னை, 19.09.2025)

திராவிடர் கழகம்

பாபநாசம்-இரும்புத் தலை கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் சிவாஜி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டதன் மகிழ்வாக இயக்க நன்கொடையாக ரூ.2000 வழங்கினார். (17.9.2025, சென்னை).

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை “தினசக்தி” நாளிதழ் ஆசிரியர் – இயக்குனர் கோமாபுரம் இராப.சந்திர சேகர் சந்தித்து பயனாடை அணிவித்து நலம் விசாரித்தார். (19.9.2025, சென்னை)

திராவிடர் கழகம்

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல், திருச்செங்கோடு பகுதித் தோழர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (சென்னை, 19.09.2025)

திராவிடர் கழகம்

எழுத்தாளர் மணா தன்னுடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான ஊடகத்துறை பயணக்குறிப்புகளின் தொகுப்பாக எழுதிய, “ஊடகம் யாருக்கானது?” எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 19.09.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *