திருநெல்வேலிக்கே “அல்வாவா?”

Viduthalai
2 Min Read

 

அரசியல், இந்தியா

தலைநகர் டில்லியில் நாளை (28.5.2023) திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா   செய்தியாளர்களை சந்தித்தார். 

1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது அன்றைய கவர்னர் ஜெனரல் லார்ட் மவுண்ட்பேட்டனிடம் கொடுத்துப் பெறப்பட்ட சோழர் சின் னம் பொறிக்கப்பட்ட செங்கோலை இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு-விடம் தமிழ் நாட்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன தலைமை மடாதிபதி வழங்கினார்.

நேரு-வின் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், இப்போது புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவைத் தலைவர் இருக்கை அருகே இந்த செங்கோலை வைக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய ‘தினமலர்’ ஊடக வியலாளர், “நீதி தவறாமல் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஆட்சி செய்த சோழ மன்னர்கள் வைத்திருந்த செங்கோலை பாஜக ஆட்சியாளர்கள் கையிலெடுத் திருப்பது சரியா ? அதுவும் கருநாடக தேர்தலுக்குப் பின் தென்னிந்தியாவில் பாஜக-வுக்கு கதவு சாத்தப்பட்ட நிலையில் இது ,முறையா?” என்ற ரீதியில் கேள்வி எழுப்பினார். அவரது கேள்வியை முழுமை யாக முடிப்பதற்குள் பாதியில் குறுக்கிட்ட அமித் ஷா “நீங்கள் கேட்க வருவது எனக்கு புரிகிறது, உங்கள் நேரம் முடிந்தது” என்று கூறிவிட்டு அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் வேறு கேள்விக்குத் தாவினார்.

இந்தக்கேள்வியைக் கேட்ட ‘தினமலர்’ ஊடகவிய லாளர் வெங்கட்ராமன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

‘தினமலருக்கு’ இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்!

மோடி ஆட்சி பாசிசத்தை நோக்கிப் பறந்து பறந்து  செல்லுகிறது என்ற உண்மையைச் சொன்னால், பஞ்சக் கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, அவுட்டுத் திரியை அவிழ்த்து விட்டு பூணூலை முறுக்கிக் கொண்டு முண்டா தட்டும் ‘தினமலருக்கே’ ஏற்பட்ட கதியைப் பார்த்தேளா?  

செய்தியாளர் என்றால் கேள்விகளைக் கேட்கத்தான் செய்வார் – அவருக்குப் பெயர்தான் செய்தியாளர்.

‘தினமலர்’ தனது செய்தியாளர் பக்கம் நிற்காமல் ‘அம்போ’ என்று தன் பத்திரி கையிலிருந்தே விரட்டியடித்து விட்டதே! ‘அம்போ’ என்று அம்பி ரோட்டில் அல்லவா நிற்கிறார். திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்து விட்டதே!

இதற்குப் பிறகாவது மோடி அரசின் பாசிசத்தைப் பத்திரிகையாளர்கள் புரிந்து கொள் வார்களா?

அகில இந்திய பத்திரிகையாளர் சம்மேளனம் என்ன செய்யப் போகிறது? யார் பக்கம்?

குறிப்பு: செங்கோல் வழங்கியது தருமபுர ஆதினமா? திருப்பனந்தாள் ஆதினமா? அதில்கூட குழப்பமோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *