எல்.அய்.சி. தென் மண்டல அலுவலகத்தில் தந்தை பெரியார் 147ஆம் பிறந்தநாள் விழா

சென்னை, செப். 21– எல்.அய்.சி. பிற்படுத்தப் பட்டோர் நலச் சங் கத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல அலு வலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பிற்படுத் தப்பட்டோர் நலச் சங்கத்தின் நிர்வாகிகளும், எஸ்.சி./எஸ்.டி. நலச் சங்கத் தின் நிர்வாகிகளும், ஊழி யர்களும் திரளாக கலந்து கொண்டனர். சென்னை கோட்டம் ஒன்றின் பொதுச் செயலாளர் முரளி நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார்.

கோட்டம் ஒன்றின் துணைத் தலைவர் கோடீஸ்வரன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வரவேற்று பேசினார். தென் மண்டல துணை தலைமைப் பொறி யாளர் சுந்தர்ராஜன் தந்தை பெரியார் அவர் களின் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை யாற்றினார்.

நிகழ்ச்சியில் உரை யாற்றிய நிர்வாகிகள், இன்றைய காலகட்டத்தில் மதவாத சக்திகளும், மனிதர்களை பிரித்தாளும் பிரிவினைவாத சக்திகளும் தமிழ் நாட்டில் காலூன்ற முடியாமல் இருப்பதற்கு தந்தை பெரியாரின் தத்து வங்கள் அருமருந்தாக இருப்பதை விளக்கி பேசினார்கள்.

சமூக நீதிக்கான உறுதி மொழியினை தோழர்கள் உரத்துக் கூறி , நிறைவேற்ற உறதி பூண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட் டது. சென்னை கோட்டம் ஒன்றின் பொருளாளர் சந் தானம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *