காவேரிப்பட்டணம் – கிருட்டினகிரியில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா

உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147-ஆம் ஆண்டு பிறந்த நாள் மாவட்டம் முழுதும் அனைத்து ஒன்றியங்களிலும் கிளைகள் தோறும் பெரியார் படத்திற்கும், சிலைகளுக்கும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டுமாய் கழகப் பொறுப்பாளர்களையும், தோழர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

17/09/2025 -அன்று காலை 8.00 மணிக்கு பையூரில் உள்ள பெரியார் சிலைக்கும்.,  காலை 9.00 மணிக்கு காவேரிப்பட்டணத்தில் உள்ள  பெரியார் சிலைக்கும், கிருட்டினகிரி பெரியார் மய்யத்திலுள்ள பெரியார் சிலைக்கு காலை10.00 மணிக்கும் மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எனவே கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.

– – – – –

கன்னியாகுமரி மாவட்டத் கழகத் தோழர்களுக்கு ஓர் அறிவிப்பு

நாளை (17.9.2025) தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள். அன்று காலை 10 மணியளவில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தந்தை பெரியாருடைய சிலைக்குத் திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செய்யவிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து கழகக் கொடியேற்றுதல், இனிப்புகள் வழங்கல் அடுத்தடுத்த ஊர்களில் உள்ள பெரியாருடைய சிலைகளுக்கு மாலை அணிவிப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தோழர்கள் அனைவரும் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

விழா நடைபெறும் விபரம்

நேரம்: 8.30 மணி வடசேரி, 9.30 மணி ஒழுகினசேரி, 10.30: இராமபுரம் ஊராட்சி இலட்சுமிபுரம், 11.00 மணி வெள்ளமடம் கிறிஸ்துநகர், 11.30 மணி ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், 12.மணி தடிக்காரங்கோணம், 12.30 மணி கலிங்கராஜபுரம் களியக்காவிளை மற்றும் குமரிமாவட்டம் முழுவதும்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *