வென்றது அறிவியல்! தோற்றது கடவுள் சக்தி! திருப்பதி கோவிலில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஏஅய் தொழில்நுட்பம்!

1 Min Read

திருப்பதி, செப்.16 திருப்பதியில் காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் அதன் தலைவர் அனில் குமார்  ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக அவர்  கூறும்போது, ‘‘திருப்பதிக்கு வரும் பக்தர்களை முகபாவங்களை வைத்தே அவர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்று காட்டும் ஏஅய் தொழில் நுட்பமான ‘‘பேசியல் ரிககனைசேன்’’  முறையில் அடையாளம் காணும் முறை அமல்படுத்தப்படும். இது  தொடர்பாக  எல்அன்ட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்’’ என்றார்.

குறிப்பாக ஆல்ப்ஸ் இமயமலை, ஆண்டிஸ் போன்ற பெருமலைத்தொடர்களில் சாகசம் செய்யும் குழுக்களில் காணாமல் போனால் தனித்து விடப்பட்டவர்களின் உணர்வுகளை ஏஅய் தொழில் நுட்பம் பொருத்திய கண்காணிப்பு பறக்கும் காமிரா கண்டறிந்துவிடும்,  இதை 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நிறுவனம் ஒன்று கண்டறிந்தது.

இதன் மூலம் உலகம் எங்கும் உள்ள பல்வேறு இடங்களில் காணாமல் போன பல ஆயிரம் நபர்கள் தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டு காப்பாற்றி குடும்பத்தோடு இணைந்துள்ளனர், தற்போது திருப்பதி கடவுளை நம்பாமல் செயற்கை நுண்ணறிவை  நம்பி களமிறங்கி உள்ளது தேவஸ்தான நிறுவனம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *