பா.ஜ.க. ஒரு மலைப்பாம்பு சஞ்சய் ராவத் விமர்சனம்

Viduthalai
1 Min Read

அரசியல், இந்தியா

மும்பை, மே 29 – சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் கஜனான் கிர்திகார், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தங்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். 

இந்நிலையில் மும்பையில் செய்தி யாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘சிவசேனாவை ஒழித்துக்கட்டுவதற்கு பாஜக முயற்சித் ததால் தான் சிவசேனா விலகியது. பாஜக முதலை அல்லது மலைப்பாம்பு போன்றது. அவர்களுடன் யார் சென்றாலும் விழுங்கப் படுகிறார்கள். தற்போது சிவ சேனா தலைமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சிவசேனா நாடாளுமன்ற  மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் இந்த முதலையிடம் இருந்து தன்னை தூர விலக்கிக் கொண்ட உத்தவ் தாக்கரேவின் நிலைப் பாடு சரியானது என்பதை உணர்ந்து கொள்வார்கள்’’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *