வளர்ச்சி யாருக்கு? அமெரிக்காவில் ரூ.153 கோடிக்கு வீடு வாங்கிய முகேஷ் அம்பானி

1 Min Read

மும்பை செப்.15-  இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி உள்ளது. இது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி ஆகும். சொகுசுவீடு அங்குள்ள ஹூபர்ட் சாலையில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ரூ.153.59 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார்.

அமெரிக்காவின் யுபிக்விட்டி நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் பெரா கடந்த 2018ஆம் ஆண்டில் ட்ரிபெகாவில் உள்ள வீட்டை வாங்கினார். தற்போது அவரிடம் இருந்து முகேஸ் அம்பானி வீட்டை வாங்கி உள்ளார்.

இது 17,000 சதுர அடி கொண்ட சொகுசு வீடு ஆகும். இந்த வீட்டில் கூடைப்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்
முகேஸ் அம்பானிக்கு சொந்தமாக ஒரு விடுதி உள்ளது.

மாண்டரின் ஓரியன்டல் என்ற பெயருடைய அந்த விடுதியை  கடந்த 2022ஆம் ஆண்டில் ரூ.866 கோடிக்கு முகேஸ் வாங்கினார்.

மேலும் அவருக்கு சொந்தமாக நியூயார்க் நகரில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டை கடந்த 2023ஆம் ஆண்டில் அவர் விற்பனை செய்துவிட்டார்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *