தேவை: சமூக மாற்றமா? தனிமனித மாற்றமா?
என்ற தலைப்பிடப்பட்ட பொருளில் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல் அரங்கத்திற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் வெளிப்படுத்திய கருத்துகள் செம்மையா இருந்தது. இளம் வயது உடைய இந்த கால இளைஞர்கள் மத்தியில் பெரியார் ஏற்படுத்தி உள்ள தாக்கம் மிக மகிழ்ச்சியாக உள்ளது. மாநில உரிமைகள், உரிமைகள் பறிப்பு, மாநிலங்களிடையே பாராபட்சம், நீட் தேர்வு, ஆணவக் கொலைகள், இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளுக்கு பெரியார் என்றும், இன்றும் தேவைப்படுகிறார் என்றால் அது மிகையல்ல. அவருடைய தொலைநோக்குப் பார்வையால் அன்றே சில சட்ட எரிப்பும், போராட்டங்களை பெரியார் நடத்தி இருக்கிறார்.
இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு எல்லாம் தனிமனித மாற்றமே தீர்வு என்று பலரும் பேசி வாதாடக் கூடும். ஆனால் தந்தை பெரியார் சமூக மாற்றம், தனி மனித மாற்றம், இரண்டுமே தேவை என்று கொள்கை வகுத்து இருப்பார்… பெரியார் என்றென்றும் தேவை என்று
அவர் பல நல்ல கருத்துகளை எளிமையாக உள்ளத்திலிருந்து கூறியதை Periyar Vision OTT இல் இன்றே பாருங்கள்.
– K.நாகலிங்கம்,
சிந்தாதிரிப்பேட்டை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com