செய்திச் சுருக்கம்

1 Min Read

தேர்வு

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நேற்று (28.5.2023) நடந்தது. இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாட்டில் 56 நகரங்களில் நடந்த தேர்வில் 50,000 பேர் பங்கேற்றனர்.

பால்…

வேறு பால் நிறுவனங்களை கண்டு யாரும் அச்சப்படவில்லை. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொது மக்கள் எந்த சலசலப்புகளுக்கும் அஞ்ச வேண் டாம் என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்.

வெயில்…

கோடை வெயிலின் தொடர்ச்சியாக நேற்று சென்னை விமான நிலையத்தில் 108 டிகிரி, திருத்தணியில் 106 டிகிரி என வெயில் கொளுத்தியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் திருப்பூரில் ஆலங்கட்டி மழை பெய்தது.

மனநலம்

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கான ‘மீண்டும் இல்லம் திட்டம்‘ விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவகாசம்…

இளநிலை பொறியியல் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் படிப்பு படிக்க விண்ணப் பிக்க இன்னும் ஒரு வார காலமே அவகாசம் உள்ளது என அதிகாரிகள் தகவல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *