சென்னை, செப்.15- அறிஞர் அண்ணா அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (15-9-2025) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முகப்பில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ,அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கிராமப்புற பிரச்சார மாநில செயலாளர் அதிரடி அன்பழகன், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், துணைத் தலைவர் வேல். சோ.நெடுமாறன், ஆஸ்திரேலியா அண்ணா. மகிழ்நன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, ச.இன்பக்கனி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர் வி.கே.பெரியார்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் தங்க. தனலட்சுமி, மாநில கழக மாணவர் கழகத் துணைச் செயலாளர் ெச.பெ.தொண்டறம், மாநில கழக விளையாட்டு அணி அமைப்பாளர் பூவரசன்,
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.இராகவன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ், அரும்பாக்கம் சா.தாமோதரன், எம்.டீ.சி. .இராசேந்திரன், சூளைமேடு ந.இராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். நகர் க.சுப்பிரமணி, வழக்குரைஞர் த.இராஜா, டெய்லர் கண்ணன், வாசகர் வட்டப்பொருளாளர் – போரூர் ஜெனார்த்தனன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், துணைத் தலைவர் நா.பார்த்திபன், இளைஞரணி துணைச் செயலாளர் த.பரிதின், வில்லிவாக்கம் சி.காமராஜ், கொடுங்கையூர் கோ.தங்கமணி, அயன்புரம் சு.துரைராசு, அ.புகழேந்தி, புதுமை இலக்கியத்தென்றல் பொருளாளர் மு.இரா.மாணிக்கம், க.கலைமணி, உடுமலை வடிவேல், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர் சு.மோகன்ராஜ், தொழிலாளரணி மா.குணசேகரன், மு.மதியழகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன், நெய்வேலி வெ.ஞானசேகரன், மற்றும் மயிலாடுதுறை கி.தளபதிராஜ், சிதம்பரம் நகர கழக அமைப்பாளர் செல்வரத்தினம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.