கொள்ளை லாபம் போதாதா? வீட்டுக் கடன் வட்டியை உயர்த்திய ஸ்டேட் வங்கி

1 Min Read

புதுடில்லி, செப். 13- இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஅய்), தங்களிடம் புதிதாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்த்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

ஆகஸ்ட் 1 முதல் புதிய வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.5 சதவீதம் முதல் 10.55 சதவீதம் வரையாக உயரும். கடன் வகை மற்றும் மதிப்பீட்டைப் பொறுத்து இது மாறுபடும்.

உயா்த்தப்பட்ட வட்டி விகிதம் (பருவகால) வீட்டுக் கடன்களுக்கு 7.5 சதவீதம் முதல் 8.7 சதவீதம் வரையிலும், வீட்டுக் கடன் மேக்ஸ்கெய்ன் (ஓடி)க்கு 7.75 சதவீதம் முதல் 8.95 சதவீதம் வரையிலும் இருக்கும். டாப்-அப் கடன்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் முதல் 10.75 சதவீதம் வரை இருக்கும். யோனோ இன்ஸ்டா வீட்டு டாப்-அப் கடனுக்கான வட்டி விகிதம் 8.35 சதவீதமாக உயரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்பிஅய்-யின் சில்லறை கடன் பிரிவில் வீட்டுக் கடன்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. இதனால் இந்த விகித மாற்றம் லட்சக்கணக்கான வாடிக்கையாளா்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *