பிலிப்பைன்ஸில் ஊழலுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

1 Min Read

மனீலா, செப். 13- பிலிப்பைன்ஸில் அரசாங்க ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளி நடப்பு செய்துள்ளனர்.

போராட்டங்களின் முக்கிய காரணங்களாகப் கூறப்படுவதாவது:

வரவுசெலவுத் திட்ட நிதியை குறைத்தது. பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் தடைபட்டுள்ளமை. இந்த போராட்டங்களில் சில பல்கலைக்கழக ஊழியர்களும் ஆர்வலர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ஊழல் தொடர்பான முக்கிய நிகழ்வுகள்: வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளில் இரண்டு செனட்டர்களும், சுமார் 17 மக்களவை உறுப்பினர்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறைச் செயலாளர் தனது பதவிலிருந்து விலகியுள்ளார்.

அதிபரின் நடவடிக்கை

பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர், உள்கட்டமைப்புத் திட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய ஒரு சுயேட்சை விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டுக்கான நிதி உதவியை நிறுத்தி வைப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *