அல்பேனியாவில் ‘செயற்கை நுண்ணறிவு’ அமைச்சர் நியமனம்

1 Min Read

அப்பேன், செப். 13- அல்பேனியா உலகிலேயே முதல் நாடாக, தனது அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சரை பணியமர்த்தியுள்ளது. டீல்லா (Diella) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏய் அமைச்சருக்கு, பொது கொள்முதல்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

டீல்லா, பொது சேவைகளைப் பயன்படுத் துவதற்கு மக்களுக்கு உதவுவதுடன், பொது ஏலக்குத்தகைகளில் நடக்கும் ஊழலை ஒழிக்க உதவும் என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். படிப்படியாக, ஏலக்குத் தகைகளில் வெற்றி பெறுபவர்களைத் தேர்ந் தெடுக்கும் பொறுப்பு முழுமையாக டீல்லாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.

ஏனெனில், டீல்லா ஏலங்களை எந்தவித பக்கச்சார்பும் இல்லாமல் நடுநிலையுடன் ஆராயும் என்று பிரதமர் குறிப்பிட் டார். பாரம்பரிய அல் பேனிய உடையில் வடிவமைக்கப்பட்ட டீல்லாவை, அரசின் இ-அல்பனியா தளத்தில் காணலாம்.

இருப்பினும், இந்த நடவடிக்கையால் ஊழல் குறையுமா என்பதில் சிலருக்கு சந்தேகம் உள்ளது. “அல் பேனியாவில் டீல்லாவும் ஊழல் செய்யத் தொடங்கி விடும்” என்று ஒரு இணையவாசி கருத்துத் தெரிவித்ததாக தி கார்டியன் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *