விநாயகன் ஊர்வலத்தில் லாரி மோதி பக்தர்கள் 8 பேர் பலி!

1 Min Read

வினைதீர்க்கும் விநாயகனா – உயிர்களைக் குடித்த விநாயகனா?

பெங்களூரு, செப்.13 கருநாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருநாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று (12.9.2025) இரவு லாரி ஒன்று விநாயகர் ஊர்வலத்திற்குள் புகுந்தது. ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர்மீடியனில் மோதி, விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் கூட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்தது.

இந்தக் கோர விபத்தில் 8 பேர் உயிரி ழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இத னால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர், காவல்துறையினர் விரைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு முதலமைச்சர் சித்தராமையா உள்பட பலர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *