புதிய நாடாளுமன்ற திறப்புவிழா பிரதமர் மோடிமீது ராகுல் காந்தி விமர்சனம்

0 Min Read

புதுடில்லி,மே 29 – புதுடில்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்துவைப்பதை எதிர்த்தும் 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்புவிழா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;

நாடாளுமன்றம் என்பது மக்களின் குரல். “புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்துள்ள பிரதமர் மோடி, இது தனக்கான முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைத்துக் கொள்கிறார்”. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *