வெளிநாட்டு நிறுவனங்களிடம் அய்டிபிஅய் வங்கியை விற்கக் கூடாது வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

1 Min Read

சென்னை, செப்.12 அய்டிபிஅய் வங்கியை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என அனைத்து இந்தியா வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து இந்திய வங்கி அதி காரிகள் சங்கம் சார்பில் செய்தியா ளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, சங்க நிர்வாகிகள் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

அய்டிபிஅய் வங்கியின் வைப்புத் தொகை ரூ.3,10,294 கோடி, கடன்கள் ரூ.2,18,420 கோடி, மொத்த வணிகம் ரூ.5,28,714 கோடி. 2024-2025 நிதியாண்டில் வங்கி பெற்ற நிகர லாபம் ரூ.7,515 கோடி. குறிப்பாக, ஒன்றிய அரசு திட்டத்தில் இந்த வங்கியில் பல மக்கள் வங்கியில் முதலீடு செய்தார்கள். மொத்தம் 2,106 கிளைகளுடன், 20,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அய்டிபிஅய் வங்கி, சமூக நீதி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்கும் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.

அய்டிபிஅய் வங்கி பொதுத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வரை, வைப்பாளர்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு இருந்தது. தனியார் கையில் சென்றால் இழப்பை சந்திக்க நேரிடும். நாங்கள் உறுதியுடன் வலியுறுத்துகிறோம் – நிதி துறை (வங்கி மற்றும் காப்பீடு) இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நுழைவது, கிழக்கு இந்தியா கம்பெனி வருகையை நினைவுபடுத்துகிறது. அய்டிபிஅய் வங்கியின் பொதுத்துறை தன்மையை பாதுகாக்க, அனைத்து இந்தியா வங்கி அதிகாரிகள் சங்கம் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *