‘கிரிக்கெட்’ அரசியல்!

1 Min Read

அய்.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டி குஜராத் அணிக்கும் சென்னை அணிக்குமா நடக்க வேண்டும்?

நடந்ததைப் பார்த்தால் அது ஆரியர் – திராவிடர் போராட்டமாகவே களம் கனல் ஏறியது (கடுமழை கொஞ்சம் தணித்திருக்கலாம்).

ஆட்டம் நடந்த அகமதாபாத் மைதானத் துக்குப் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் – கேட்கவும் வேண்டுமா!

பி.சி.அய். செயலாளர் யார் தெரியுமா? அமித்ஷாவின் அருமை மகன் – ஜெய் ஷாவும் ஆட்டத்தை ரசித்துக் கொண் டிருந்தார். மூன்று பந்தில் 10  ரன் சென்னை அடிக்க வாய்ப்பில்லை குஜராத்துதான் ஜெயிக்கப் போகிறது என்ற குஷியில் பொறுப்பான பதவியில் உள்ளவர் நெஞ்சைத் தட்டிக் காட்டி குதித்தார்.

அந்தோ பரிதாபம்! குஜராத் ஆசையில் மண் விழுந்தது – சென்னை அணி வீரர் 10 ரன்களை அடித்து வெற்றிக் கோப்பையை சென்னை அணியின் தலைவர் தோனி கையில் கொடுத்ததுதான் தாமதம்! மக்கள் வெள்ளம் கரை புரண்டு ஆடி மகிழ்ந்தது. கிரிக்கெட்டில்கூட ஆரிய திராவிடப் போராட்டம் என்ற ரீதியில் தான் ஆட்டம் நடந்தது.  கடைசியில் திராவிடமே வென்றது. ஆனால் இன்று வெளிவந்த தினமலர் குஜராத் ஜெயித்ததுபோல செய்தி வெளியிட்டது – வெட்கக் கேடு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *