உலக பணக்காரர் பட்டியலில் லேரி எலிசன் முதலிடம் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளினார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நியூயார்க் செப். 11-  உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, அவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரித்ததே, லேரி எலிசனின் சொத்து மதிப்பு உயர்வுக்கு முக்கியக் காரணம். நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில் 41% பங்குகளை தன்வசம் வைத்துள்ள எலிசனின் சொத்து மதிப்பு தற்போது $393 பில்லியன் ஆக உள்ளது.

இதன்மூலம், $384 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட எலான் மஸ்க்கை அவர் முந்தியுள்ளார்.

  1. லேரி எலிசன் (ஆரக்கிள்) – $393 பில்லியன் 2. எலான் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ்) – $384 பில்லியன் 3. மார்க் ஸுக்கர்பெர்க் (மெட்டா)  4. ஜெஃப் பெஸோஸ் (அமேசான்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *