குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி இருப்பினும் தார்மீகத் தோல்வியே : காங்கிரஸ் கருத்து

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டில்லி, செப்.10  குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்கு களைப் பெற்று தோல்வி அடைந் தார். இந்த வெற்றிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சி.பி. ராதா கிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட் டுள்ளது. அந்தப் பதிவில், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன. எதிர்க்கட்சிகளின் செயல்திறன் சந்தேகத்திற்கு இடமின்றி மரியாதைக்குரியதாக இருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “கூட்டணி வேட்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 40% வாக்குகளைப் பெற்றார். ஆனால் 2022-இல் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெறும் 26% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தன. எனவே, பா.ஜ.க.வுக்கு எண்கணித முறையில் வெற்றி என்றாலும், உண்மையில் அது தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஒரு தோல்விதான். சித்தாந்த ரீதியான போர் குறையாமல் தொடர்கிறது” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை, பா.ஜ.க.வின் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தங்கள் பலத்தை அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *