உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை, ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு – விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை,மே30 – உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முது கலை, ஒருங்கிணைந்த தமிழ் முது கலை பட்டப்படிப்பு ஆகியவற்றில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை (M.A.Tamil), அய்ந்தாண்டு ஒருங்கி ணைந்த தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (Five Year Integrated M.A. Tamil)ஆகியன வழங்கப் படுகின்றன. அந்த வகையில் 2023_-2024ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்  சேர்க்கை நடைபெறவுள்ளது. விண்ணப்பங்களை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 15 பேருக்கு மாதந் தோறும் ரூ.2 ஆயிரம் கல்வி உதவித் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப் படும். ஆண், பெண் இருபாலருக் கென தனித்தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன.  முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங் கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்தை நேரிலோ அல்லது தபால்  மூல மாகவோ, இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகல், வாட்ஸ்அப் எண் ஆகியவற்றுடன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மய்யத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஜூன் 9ஆ-ம் தேதிக்குள் ஒருங் கிணைந்த தமிழ் முதுகலை பட்டப் படிப்புக்கும், ஜூன் 20ஆ-ம் தேதிக்குள் தமிழ் முதுகலை படிப்புக்கும் விண் ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நிறுவனத்தை நேரிலோ,044 2254 2992 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அணுகலாம். 

சேர்க்கை தொடர்பான விதி முறைகளை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *