டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
* தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள், ஆளும் திமுக அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்கிறது தலையங்கம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வீரசைவ-லிங்காயத்துக்கள் இந்துக்கள் அல்ல, ‘மற்றவர்கள்’: கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் செப்டம்பர் 22 முதல் நடத்தப்படும் சமூகக் கல்வி ஆய்வு-2025 (ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு)-ல் “மற்றவர்கள்” என்ற பத்தியின் கீழ் மதத்தைக் குறிக்குமாறு அகில பாரத வீரசைவ மகாசபா அதன் சமூக உறுப்பினர்களான வீரசைவ-லிங்காயத்துகளைக் கேட்டுக் கொண்டது.
* மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக தனது சொந்த அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வேன் என்று தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் சாகன் புஜ்பால் எச்சரிக்கை
* 25 இடங்கள் தேறாது: வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.(யு) 25 க்கும் மேற்பட்ட இடங்களை வென்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்கிறார் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர்
தி டெலிகிராப்:
* இந்த ஆண்டும், ஓபிசி ஆராய்ச்சி மாணவர்களுக்கு நான்கு மாதங்களாக பெல்லோஷிப் நிதி வழங்கப்படவில்லை; NFOBC உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், உயிர் வாழ பணத்தை கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜே.என்.யு. மாணவர்கள் புகார்.
* இன்று நடைபெறும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்., நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் பங்கேற்காது.
– குடந்தை கருணா