திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகைக்கு “தந்தை பெரியார் சுற்றுலா மாளிகை”எனப் பெயர் சூட்டித் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு நன்றி தெரிவித்து மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே. ஆர் .ராஜு ஆகியோருக்கு மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா .குணசேகரன் சால்வை போர்த்தி புத்தகம் வழங்கினார். நிகழ்வில் மாவட்டத் கழக தலைவர் ச. இராஜேந்திரன், செயலாளர் இரா. வேல்முருகன், காப்பாளர் இரா. காசி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பேரா.நீல கிருஷ்ணபாபு மற்றும் முனைவர் கி.சவுந்தரராசன் ஆகியோர் கலந்து கொண்டனர் (30.5.2023)