புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வித்துறையில் கலப்படத்தை அனுமதிக்க மாட்டோம் சித்தராமையா எச்சரிக்கை!!

1 Min Read

அரசியல்

பெங்களூர், மே 30 புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி துறையில் கலப்படம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

கருநாடாகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் சித்தராமையாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். எழுத்தாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பெற்றுக் கொண்ட அவர், எழுத்தாளர்களை அச்சுறுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே காவ்ல துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கன்னட போராளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் மற்றும் எழுத்தாளர்கள் மீது பாஜக ஆட்சியில் தொடரப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனவும் சித்தராமையா உறுதி அளித்தார். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குழந் தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் பாடங்களை அனுமதிக்க மாட்டோம் என கூறிய அவர், கல்வி ஆண்டு தொடங்கி உள்ளதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.சட்டத்தை கையில் எடுத்து வகுப்பு வாத கலவரம் செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் எனவும் சித்தராமையா எச்சரித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *