மதுரை, மே 30 – குற்ற வழக்குகளில் சிக்கி வருவதால் பாஜகவில் உள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகிகளைக் கண்காணிக்க மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவில் 20-க்கும் மேற்றப் பட்ட அணிகள் உள்ளன. இந்த அணிகளின் நிர்வாகிகள் பலர் அண்மைக்காலமாக அதிகளவிலான குற்ற வழக்கு களில் சிக்கி வருகின்றனர்.
இதனால் பாஜகவில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அதிகளவில் இருப்பதாக சமூக வலை தளங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதையடுத்து பாஜக வில் அணிப்பிரிவு நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கண் காணிக்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாம்.