”அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது” அகிலேஷ் வலியுறுத்தல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லக்னோ, செப்.8 அமெரிக்கா வுடனான இந்தியாவின் உறவு எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என சமாஜ்வாதி கட்சித் தலை வரும், உத்தரப் பிரதேச மேனாள் முதலமைச்சருமான அகிலேஷ் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருள்கள் மீது 50% கூடுதல் வரி விதித்த சூழலில், அகிலேஷ் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

டிரம்ப், இந்தியப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதித்தது, இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் வர்த்தக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், “பிரதமர் நரேந்திர மோடியும் நானும் நண்பர்களாக இருப்போம்” என டிரம்ப் கூறிய தோடு, மோடியும் இதே கருத்தைப் பிரதிபலித்தார்.

அமெரிக்காவுடனான உறவின் முக்கியத்துவம்

செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ்  “அமெரிக்கா ஒரு முதலீட்டாளர்களின் தலைவன். அங்கே சொத்துக்களும் பணமும் உருவாக்கப்படுகின்றன. அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற பல துறைகளில் அமெரிக்கா உலகின் சிறந்த நாடாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டுடனான உறவு ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது” என்று கூறினார்.

மேலும், “நாம் நமது பொரு ளாதாரத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டைப் புறக்கணிக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், இந்தியாவின் எல்லை மற்றும் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சில நாடுகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அகிலேஷ் வலி யுறுத்தியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *