செங்கோட்டையன் கட்சி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு அ.தி.மு.க. பொறுப்பிலிருந்து 1,500 பேர் விலகினர்

1 Min Read

ஈரோடு, செப்.7– அ.தி.மு.க.வினர் 1,500 பேர் கே.ஏ.செங்கோட்டை யனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியிலிருந்து விலகினர்.

செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபி சட்டமன்ற தொகுதியில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளருமான சத்தியபாமா பதவி விலகியுள்ளார். இதேபோல் கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள் என அ.தி.மு.க.வினர் சுமார் 1,500 பேர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

இதற்கான கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர்.

அ.தி.மு.க.வினர் அனுப்பி உள்ள  அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:-

அ.தி.மு.க. பழைய வலிமையை பெறவேண்டும். வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஓர் ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்றுதான் செங்கோட்டையன் கூறுகிறார். அதற்காக அவருடைய கட்சி பதவிகளை பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்களுடைய கட்சி பதவியிலிருந்து விலகுகிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்தால் பதவியில் நீடிப்போம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *