‘‘அதிமுக மூழ்கும் கப்பல்’’ – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

1 Min Read

சென்னை, செப்.7  அதிமுக ஒரு ‘‘மூழ்கும் கப்பல்’’ என்றும், தமிழ்நாட்டில் தற்போது பாஜக தனது ‘‘சித்து விளையாட்டைத்’’ தொடங்கியுள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், இதை உணர்ந்துதான் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் கூட்டணியிலிருந்து விலகியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு மக்கள் அளித்த எதிர்ப்பு தெளிவாகத் தெரிந்தது என்றார். அதன் தொடர்ச்சியாகவே கூட்டணியில் இருந்து பலர் விலகி வருவதாகவும், அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் போன்றோரும் வெளியேறும் நிலை உருவாகி  இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘‘உறவாடி கெடுக்கும்
கட்சி’’

மேலும், பாஜக, ‘‘உறவாடி கெடுக்கும் கட்சி’’ என விமர்சித்த செல்வப்பெருந்தகை, நாட்டின் பல மாநிலங்களில் நடந்ததுபோல, தமிழ்நாட்டிலும் அதிமுகவுக்குள் பதற்றங்களை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக எச்சரித்தார்.

பாஜகவின் சித்து விளையாட்டு இப்போதுதான் தொடங்கியுள்ளது, இன்னும் நிறைய நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *