தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவோம் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

4 Min Read

ஒரத்தநாடு, செப். 5– திராவிடர் கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 01-09-2025 அன்று மாலை 6:30 மணி அளவில் ஒரத்தநாடு பெரியார் மாளிகையில் நடைபெற்றது

தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி மாவட்ட துணை செயலாளர் ரெ.சுப் பிரமணியன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசியம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்கிட வேண்டும் செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாத இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன்  பங்கேற்பதின் அவசியம்  ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குரித்து தொடக்க உரையாற்றினார்

தொடர்ந்து மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார்கோயில் வே. நாராயணசாமி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் ரெ.சசிக்குமார், ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பொறியாளர் பிரபாகரன், குலமங்கலம் கணேசன், கண்ணை கிழக்கு கிளைக் கழகத் தலைவர் இரா.செந்தில்குமார், நகரத் துணைத் தலைவர் மு.சக்திவேல், தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் துரை,ஒன்றிய இளைஞரணி செயலாளர் தெற்குநத்தம் குமரவேல், ஒன்றிய விவசாய அணி செயலாளர் தலைமங்கலம் கோவி,ராமதாஸ், மன்னர் சரோஜக் கல்லூரி மாணவர் தலைவர் உதய பிரகாஷ், ஒரத்தநாடு நகர கழக தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞ ரணி துணைச் செயலாளர் ராஜதுரை, கழக சொற்பொழிவாளர் முனைவர் வே.ராஜவேல், ஒன்றிய செயலாளர் அ.சுப் பிரமணியன், ஒன்றிய தலைவர் இரா.துரை ராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர்

நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்

திராவிடர் கழக தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன் அவர்களின் தந்தையார் இயக்கத்திற்காக சிறை சென்ற வன்னிப்பட்டு  சோ.செல்லப்பன், தொடர்ந்த விடுதலை வாசகர் ஆயங்குடி சாமிஅய்யா, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ராஜதுரை அவர்களின் சிறிய தந்தையார் சுப்ரமணியன், பெரியார் சிந்தனையாளர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் காசநாடு புதூர் தமிழரசன்,திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் புலவர் செல்ல.கலைவாணன் ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது

ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஒரத்த நாடு நகரத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக் களை சேர்க்கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.

“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று  ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி  வழங்குவது என முடிவு செய்யப் பட்டது.

செப் – 17 சமூகநீதி நாள்

அறிவுலக  ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை (செப் – 17 சமூகநீதி நாள்) மிக எழுச்சி யோடு கொண்டாடும் வகையில்,  ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஒரத்த நாடு நகரத்தில் கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, நகரம், கிராம பகுதிகளில் மோட்டார் சைக்கிள் பேரணியாக சென்று  பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, ஒளிப்பெருக்கி வைத்து கழக கொள்கைகளை ஒளிபரப்பி திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.

அன்று மாலை ஒரத்தநாட்டில் மாபெரும் பெரியார் பட ஊர்வலத்தை மிகச் சிறப்பாக நடத்துவது எனும் முடிவு செய்யப்படுகிறது

2025 அக்டோபர் 4 அன்று செங்கல் பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதியின் சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் அதிகமான கழகத் தோழர்கள் அனை வரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப் பது என முடிவு செய்யப்படுகிறது.

தந்தை பெரியார் 147 – வது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

செப்டம்பர்-7 தஞ்சாவூர் ராஜ் மஹாலில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெறும் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் தலையாமங்கலம் இரா.துரைராஜ் இல்ல மணவிழாவில் கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது

கூட்டத்தில் ஒரத்தநாடு பெரியார் படிப்பக நிர்வாகக்குழு புதிய பொறுப்பாளர்களாககீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டார்கள்

ஒரத்தநாடு பெரியார் படிப்பக நிர்வாக குழு

புரவலர்கள் வழக்குரைஞர் சி.அமர்சிங், இரா.ஜெயக்குமார்,அ.அருணகிரி, இரா.குணசேகரன், ச.சித்தார்த்தன், இரா.துரைராஜ்,அ.சுப்பிரமணியன், முனைவர் வே.ராஜவேல்

இயக்குநர்: பேபி ரெ.ரவிச்சந்திரன்,

தலைவர்:  பு.செந்தில்குமார்,

செயலாளர்:  ரெ.சசிகுமார்,

பொருளாளர்: பொறியாளர்
ச. பிரபாகரன்,

துணைத் தலைவர்கள்:
கே.எஸ்.பி..ஆனந்தன், வீ.அகிலன்,

துணைச் செயலாளர்கள்
இரா.செந்தில்குமார், அ. மாதவன்

செயற்குழு உறுப்பினர்கள்
இரா.ராவணன், கக்கரை கோ. ராம மூர்த்தி, மு.சக்திவேல், மா.சாக்ரடீஸ், ஆ.சக்கரவர்த்தி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *