நாகர்கோவில், செப். 4- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிர மணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார்.
பொதுக்குழு உறுப் பினர் மு.இராஜசேகர், மாவட்ட துணைச் செயலா ளர் சி.அய்சக்நியூட்டன், நாகர்கோவில் மாநகர தலைவர் ச.சகருணாநிதி, குமரி நகர செயலாளர் க.யுவான்ஸ், அர்ஜூன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், கல்வி வள்ளல் காமராசர் பேசிய பகுத்தறிவு சிந்த னைகள் அடங்கிய துண் டறிக்கை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. மக்கள் ஆர்வமாக படித்தனர்.