நாகர்கோவில் மாநகர பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்

1 Min Read

நாகர்கோவில், செப். 4- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிர மணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார்.

பொதுக்குழு உறுப் பினர் மு.இராஜசேகர், மாவட்ட துணைச் செயலா ளர் சி.அய்சக்நியூட்டன், நாகர்கோவில் மாநகர தலைவர் ச.சகருணாநிதி, குமரி நகர செயலாளர் க.யுவான்ஸ், அர்ஜூன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், கல்வி வள்ளல் காமராசர் பேசிய பகுத்தறிவு சிந்த னைகள் அடங்கிய துண் டறிக்கை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. மக்கள் ஆர்வமாக படித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *