சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குறித்த இரு நாள் தேசிய கருத்தரங்கம்

1 Min Read

‘நூறாண்டுக் காலச் சுயமரியாதை இயக்கம் – பெரியார் மற்றும் திராவிட இயக்கம், ஒரு சகாப்தம்’ என்கிற தலைப்பில் சென்னையில் வரும் செப்டம்பர் 11, 12ஆம் தேதிகளில் இருநாள் தேசியக் கருத்தரங்கம் சேப்பாக்கத் திலுள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரங்கில் நடைபெற உள்ளது.

பெரியார் திடலில் இயங்கி வரும் திரா விடர் வரலாற்று மய்யமும், சென்னை பல்கலைக்கழகத்தி லுள்ள அறிஞர் அண்ணா பொது விவகார ஆய்வு மையமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்த உள்ளன. முழுக்க ஆங்கிலத்தில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு அறிஞர்கள் கல்வியாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளனர். சிறப்புமிக்க இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே உள்ள QR குறியீட்டினை ஒளிவருடி (scan) பதிவு செய்யவும்.

 மேலும் விவரங்களுக்குத்
தொடர்பு கொள்ள வேண்டியது
முனைவர் கோ. ஒளிவண்ணன் +91984003705

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *