திராவிடர் கழகம் உருவான நாள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரப்புரை நிகழ்ச்சி

1 Min Read

கன்னியாகுமரி, செப்.3 நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகமாக உருவான நாள் 27.8.1944  (சேலம்). அதை குமரிமாவட்டத்தில் பொதுமக்களுக்குப் பரப்புரை செய்யும் வகையில் நிகழ்ச்சி 27.8.2025 அன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம்  ஆரல்வாய்மொழியில், மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில், கழக காப்பாளர் ம.தயாளன் முன்னிலையில்நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பரப்புரையை தொடங்கி வைத்தார் மாவட்டக் கழக  மேனாள் அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ்,  அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகத்  தலைவர் எஸ்.குமார தாசு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமார், மகளிரணி செயலாளர் த.சிறீவள்ளி தயாளன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், குமரி நகர செயலாளர் க.யுவான்சு பொதுக்குழு உறுப்பினர்  மா.மணி மாவட்ட கழக மகளிரணி தலைவர் சு.இந்திராமணி மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்களுக்கு  கழகத் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *