அப்பாடா, உண்மை உலா வருகிறதே! இந்தியர்கள் பெயரில் லாபம் ஈட்டுவோர் ‘பார்ப்பனர்களே!’ டிரம்பின் வர்த்தக ஆலோசகர் குற்றச்சாட்டு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், செப்.3 இந்தியர்கள் பெயரில் பார்ப்பனர்கள் லாபம் ஈட்டு கின்றனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ புதிய குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய மக்கள் பெயரில் பார்ப்ப னர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும், அதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: ‘‘பிரதமர் மோடி மிக சிறந்த தலைவர். மோடி உலகின் மிகப்பெரிய ஜன நாயகத்தை வழிநடத்துகிறார். இந்தி யாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்குடன் ஏன் சேர்ந்து உள்ளார் என்பது புரியவில்லை.

ரஷ்யாவிடம் இருந்து முன்பு இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கவில்லை. இப்போது ரஷ்ய நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தருவதால் இந்தியா வாங்கி சுத்திகரித்து பல நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்கிறது. இந்திய மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய மக்களின் இழப்பில் பார்ப்பனர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். அதை நிறுத்த வேண்டும்,” என்றார்.

இது தொடர்பாக ஆங்கிலத்தில், ‘‘You’ve got Brahmins profiteering out the expense of the Indian People’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *