இந்தியா என்ன பள்ளிக் குழந்தையா? அமெரிக்கா விதித்த வரி புத்திசாலித்தனமானது அல்ல அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் ரிக் சான்சேஸ் கடும் விமர்சனம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், செப். 2- ‘‘இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல. பெரிய நாடு. அதற்கு அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விவேகமான கொள்கை கிடையாது’’ என அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்சேஸ் விமர்சனம் செய்துள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார்.

அதிபர் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு சட்டவிரோதமானது எனவும், இதை நீக்க வேண்டும் என அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்சேஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவை, பள்ளிக் குழந்தை போல் அமெரிக்கா நடத்தக் கூடாது. இந்தியா பெரிய நாடு.

அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் அக்கறையுடன் கூடிய மற்றும் அறிவியல் பூர்வமான சிந்தனையாக இருப்பதில்லை. இந்தியா எடுக்கும் முடிவுகளுக்கு மேற்பார்வை தேவை என்பது போல் அமெரிக்காவின் அணுகுமுறை உள்ளது.

இதை கண்டுகொள்ளாமல் இந்தியா தனது நிலைப்பாட்டை அப்படியே பின்பற்றுவது பாராட்டுக்குரியது. அமெரிக்காவின் வரிக் கொள்கை பார்ப்பவர்களுக்கு மிகச் சிறந்தவையாக இருப்பது போல் தெரியும். ஆனால், இது அவமதிப்பான மற்றும் விவேகமற்ற கொள்கை. உக்ரைன் மீது ரஷ்யா ஏன் போர் தொடுத்தது என்ற நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் நிர்வாகம் புரிந்து கொள்ளவில்லை. நீண்ட வரலாறு, வளங்கள் மற்றும் திறன்கள் உள்ள இந்தியாவை, பள்ளிக் குழந்தை போல் நடத்துவது அவமதிப்பானது. இந்தியா வளர்ந்த நாடு.

ரஷ்யாவிடம் இருந்து சீனா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா தனது வரம்புகளை உணர்கிறது. இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் விஷயத்தில் அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட கோபம் காரணமாக எடுக்கப்பட்டது.

பன்னாட்டு விஷயங்களில் பின்னணி சம்பவங்களை பற்றி அமெரிக்க தலைவர்கள் பலருக்கு சரியான புரிதல் இல்லை. ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதலை பிரதமர் மோடியால் நடைபெறும் போர் என அதிபர் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவேரோ கூறுகிறார். இது முற்றிலும் நகைப்புக்குரியதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *