எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார வாகனத்தில் பிஜேபியினர் புறக்கணிப்பு : மதுரையில் சர்ச்சை

1 Min Read

மதுரை, செப்.2 அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4ஆம் கட்டமாக செப்.1 முதல் செப். 4ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று (1.9.2025) மதுரை வந்தார்.  மாலை 5.50 மணிக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பேசினார். தொடர்ந்து திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார வாகனத்தின்மீது நின்றவாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதுவரை நடந்த கூட்டங்களில் அந்தந்த ஊர்களில் முக்கிய கூட்டணி கட்சியினரை தன்னுடன் நிற்க வைத்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்த எடப்பாடி, நேற்று திருப்பரங்குன்றத்தில் நடந்த கூட்டத்தில், அதிமுக மாவட் டச் செயலாளரான ராஜன் செல் லப்பாவை மட்டும் நிற்க வைத் திருந்தார். பாஜவைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் பலர் மதுரையில் இருந்தும் அவர்கள் யாரையும் பிரச்சார வாகனத்தில் ஏற்றவில்லையாம்.

குறிப்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனி வாசன், மாவட்ட தலைவர் சிவ லிங்கம் ஆகியோர் பிரச்சார வாகனத்தில் ஏறமுயன்றனர். ஆனால், அதிமுக அய்டி விங்க் நிர்வாகி ராஜ்சத்யன், மேலே இட மில்லை எனக்கூறி, அவர்களை ஏறவிடாமல் தடுத்தார்.  இதனால், அதிர்ச்சியடைந்த பாஜவினர் அங்கு சிறிது நேரம் நின்றிருந்தனர். ஆனால், பிரச்சார வாகனத்துக்கு தாங்கள் அழைக்கப்படாததால் கடும் அதிருப்தியடைந்து, எடப்பாடி பேசி முடிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *